சிவவாக்கியர்
**************
73.ஆத்துமா வனாதியோ வாத்துமா வனாதியோ
பூத்திருந்த ஐம்பொறி புலன்களு மனாதியோ
தாக்கமிக்க நூல்களுஞ் சதாசிவ மனாதியோ
வீக்கவந்த யோகிகாள் விரித்துரைக்க வேணுமே.
அனாதி = ஆதியில்லாமை, இறைவன், சிவன்
வீக்க = கட்ட, பூரிக்க, மிக
நம்முடலில் ஓடும் ஆத்துமா(சீவாத்துமா) அனாதியோ?
பரமாத்துமாவான இறைவன் அனாதியோ?
நம்முடலில் பூத்திருந்த ஐம்புலன்களும் அனாதியா?
ஞானம் புகட்டும் சாற்றிறங்கள் அனாதியா?
இறுதியில் சதாசிவமான அனாதியே அனாதியா?
உயிர் மூச்சைக் கட்ட வந்த யோகிகளே, இவற்றை விளக்கமாக உரைக்கவேண்டுமே!
Tuesday, January 01, 2008
73.ஆத்துமா வனாதியோ வாத்துமா
Posted by ஞானவெட்டியான் at 10:07 AM
Labels: சிவவாக்கியர் பாடல்கள்
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment