Tuesday, January 01, 2008

71.சிவாயவென்ற வக்கரஞ் சிவனிருக்கு

சிவவாக்கியர்
**************
71.சிவாயவென்ற வக்கரஞ் சிவனிருக்கு மக்கரம்

உபாயமென்று நம்புதற்கு உண்மையான வக்கரம்

கபாடமற்ற வாசலைக் கடந்துபோன வாயுவை

உபாயமிட் டழைக்குமே சிவாயவஞ் செழுத்துமே.


சிவனுக்கு மூலமந்திரம் "சிவயநம".

இந்த ஐந்தெழுக்களே இறையை உணர வழி(உபாயம்).இவ்வைந்தெழுத்து மந்திரத்தால்தான், தந்திரமாக(உபாயம்) கபாலத்தில் கதவு இல்லாத வாயிலைக்கடந்து செல்லும் வாயுவைச் சரியான பாதையில் திருப்ப இயலும்.

0 Comments: