சிவவாக்கியர்
***************
69.இருக்கவேணு மென்றபோ திருக்கலா மிருக்குமோ
மரிக்கவேணு மென்றலோ மண்ணுளே படைத்தனர்
சுருக்கமற்ற தம்பிரான் சொன்னவஞ் செழுத்தையும்
மரிக்குமுன் வணங்கிடீர் மருந்தெனப் பதங்கெடீர்.
மண்ணில் இருக்கவேண்டுமென எண்ணியபோது (இருக்கலாம்)வாழ்ந்தீர்கள். இருக்கவேண்டுமோ? இல்லை; இறக்கவேண்டுமோ? என்று எண்ணும் நிலை வருவதற்காகத்தானே மண்ணினால் படைத்தான். ஆகவே, இருக்கும் காலத்துள்ளே, தம்பிரானாம் குரு சொன்ன படிக்கு அஞ்செழுத்து மந்திரமாம் "நமசிவய" வை, மருந்தைப் பதங்கெடுமுன் உண்ணுவதைப்போல, இறக்குமுன்னரே ஓதி உணருங்கள்.
Tuesday, January 01, 2008
69.இருக்கவேணு மென்றபோ திருக்கலா
Posted by ஞானவெட்டியான் at 10:01 AM
Labels: சிவவாக்கியர் பாடல்கள்
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment