Tuesday, January 01, 2008

69.இருக்கவேணு மென்றபோ திருக்கலா

சிவவாக்கியர்
***************
69.இருக்கவேணு மென்றபோ திருக்கலா மிருக்குமோ

மரிக்கவேணு மென்றலோ மண்ணுளே படைத்தனர்

சுருக்கமற்ற தம்பிரான் சொன்னவஞ் செழுத்தையும்

மரிக்குமுன் வணங்கிடீர் மருந்தெனப் பதங்கெடீர்.


மண்ணில் இருக்கவேண்டுமென எண்ணியபோது (இருக்கலாம்)வாழ்ந்தீர்கள். இருக்கவேண்டுமோ? இல்லை; இறக்கவேண்டுமோ? என்று எண்ணும் நிலை வருவதற்காகத்தானே மண்ணினால் படைத்தான். ஆகவே, இருக்கும் காலத்துள்ளே, தம்பிரானாம் குரு சொன்ன படிக்கு அஞ்செழுத்து மந்திரமாம் "நமசிவய" வை, மருந்தைப் பதங்கெடுமுன் உண்ணுவதைப்போல, இறக்குமுன்னரே ஓதி உணருங்கள்.

0 Comments: