Tuesday, January 01, 2008

68.மூலநாடி தன்னிலே முளைத்தெழுந்த

சிவவாக்கியர்
***************
68.மூலநாடி தன்னிலே முளைத்தெழுந்த சோதியை
நாடிநாடி யும்முளே நாழிகை யிருந்தபின்
பாலனாகி வாழலாம் பறந்துபோக யாக்கையும்

ஆலமுண்ட கண்டராணை யம்மையாணை யுண்மையே.


மூலநாடியாம் அக்கினியில் முளைத்து எழுந்து ஒளிவீசும் சோதியை நம் இட, பிங்கலை நாடியின் உதவியால் நாடி நமக்குள்ளே ஒரு நாழிகை காலம் அதனுடன் ஒன்றி சலனமிற்றி இருந்தால், முதுமை குறையும்; ஒரு வாலிபனின் சக்தி கிட்டிடும். இந்த சடல உடல் இருக்கும்போதே, சூக்கும உடலால் பறந்து அடுத்த சிந்தனைத் தளத்துக்குச் செல்லும் வலிமையும் கிட்டும். இது ஆலகால விடமுண்ட கண்டத்தை உடைய திருநீலகண்டன் மீது ஆணை; அம்மையாம் வாலாம்பிகை மீது ஆணை. இது உண்மையே!

0 Comments: