சிவவாக்கியர்
***************
67.உழலுவாச லுக்கிரங்கி யூசலாடு மூமைகாள்
உழலும்வாச லைத்திறந்து வுண்மைசேர வெண்ணிலீர்
உழலும்வாச லைத்திறந்து வுண்மைநீ ருணர்ந்தபின்
உழலும்வாச லுள்ளிருந்த வுண்மைதானு மாவீரே.
கிரங்கி = மயங்கி
உண்மை = அறிவு, உள்மெய்
உழலும் = சுழலும்
காம இன்பத்திற்காக உள்ள வாயிலுக்காக ஏங்கி மயங்கி மனதை ஊஞ்சல்போல் அலைபாயவிடும் ஊமைகளே! சுழன்றுகொண்டுள்ள வெட்ர்டாத சக்கரமாம் கண்களைத் திறந்து உள் மெய்க்குள்ளே செல்ல எண்ணமாட்டீர்கள். அப்படி அந்த வாயிலைத் திறந்து உள்ளே சென்று அறிவை நீங்கள் உணர்ந்தபின்பு, அந்த அறிவோடு ஒன்றுசேர்ந்து தானும் அறிவாக மாறிவிடுவீர்களே. இங்கு அறிவு என்பது பூரணமாகிய இறை.
Tuesday, January 01, 2008
67.உழலுவாச லுக்கிரங்கி யூசலாடு
Posted by ஞானவெட்டியான் at 9:59 AM
Labels: சிவவாக்கியர் பாடல்கள்
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment