Tuesday, January 01, 2008

66.ஈன்றவாச லுக்கிறங்கி யெண்ணிறந்து

சிவவாக்கியர்
**************
66.ஈன்றவாச லுக்கிறங்கி யெண்ணிறந்து போவீர்காள்

கான்றவாழை மொட்டலர்ந்த காரண மறிகிலீர்

நான்றவாசலைத் திறந்து நாடிநோக்க வல்லீரேல்

தோன்றுமாயை விட்டொழிந்து சோதிவந்து தோன்றுமே!


நம்மை ஈன்ற வாசலாம் கருக்குழியில் ஆசை வைத்து இறங்கி இறங்கி விந்து விரயம் செய்து இறந்து போகும் மக்களே! வாழை மரம் பூத்துக் குலை தள்ளியவுடன் வெட்டி வீழ்த்துவது ஏன்? என எண்ணிப்பார்த்து உண்மையை அறிந்துகொள்ளுங்கள். தன்னிடன் உள்ள வீரியம் அகன்றவுடன் இவ்வுடலாகிய வாழை மரத்தைச் சுடுகாட்டுக்குத்தான் அனுப்புவார்கள். ஆகவே, நான்ற வாயிலாம் வாயின் அடிப்பகுதியில் உள்ள நம்பு முடிச்சை நாடி, ஊசிப்பார்வை வைத்து நோக்கியிருக்கும் வல்லமை உள்ளவரென்றால், தோன்றும் மாயையை ஒழித்து எழும் சோதியாம் இறைவனைக் காணலாம்.

0 Comments: