Tuesday, January 01, 2008

65.கண்டுநின்ற மாயையுங் கலந்து

சிவவாக்கியர்
***************
65.கண்டுநின்ற மாயையுங் கலந்துநின்ற பூதமும்

உண்டுறங்கு மாறுநீ ருணர்ந்திருக்க வல்லீரேல்

பண்டையா றுமொன்றுமாய்ப் பயந்தவேத சுத்தனாய்

அண்டமுத்தி யாகிநின்ற வாதிமூல மூலமே!


கண்ணால் காண்பது எல்லாம் மாயை. அதில் திளைத்துள்ள ஐந்து பூதங்கள். உண்டி உண்டவுடன் உடல் உறங்குவதுபோல், இந்த ஐம்பூதங்களையும் மாயையையும் உறங்க வைக்கும் வழியை உணர்ந்து இருக்கும் வல்லமை உடையவரென்றால், பயபக்தியுடன் சுத்தமான மனதுடன் பழய வழியாகிய முக்கலையை ஒன்றித் தவமிருந்து ஆதி மூலமாகிய அண்டத்துடன் ஒன்றி முத்தி பெறலாம்.

0 Comments: