சிவவாக்கியர்
**************
64.கழுத்தையு நிமிர்த்திநல்ல கண்ணையும் விழித்துநீர்
பழுத்துவாய் விழுந்துபோன பாவமென்ன பாவமே
அழுத்தமான வித்திலே யனாதியா யிருப்பதோர்
எழுத்திலா வெழுத்திலே யிருக்கலா மிருந்துமே.
எழுத்திலா எழுத்து = சிவம்
நீங்கள், கழுத்தை நிமிர்த்தி, கண்களை விரிய விழித்து யோகம் புரிகிறேன் எனக்கூறி, இறுதியில் வயதாகி உடல் பழுத்து, வாயில் உள்ள பற்கள் உதிர்ந்துபோன நிலையை அடைந்துள்ளது பாவமே! சிறு அணுக்குள் பெரிய சக்தியை அடைத்து வைத்ததால் அழுத்தம் நிறைந்துள்ள விந்தினுள்ளே அனாதியாயிருக்கும் சிவத்தை, எழுத்திலா எழுத்தை அறிந்து அதனுள் மூழ்கியிருக்கலாமே!
Tuesday, January 01, 2008
64.கழுத்தையு நிமிர்த்திநல்ல கண்ணையும்
Posted by ஞானவெட்டியான் at 9:56 AM
Labels: சிவவாக்கியர் பாடல்கள்
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment