Tuesday, January 01, 2008

63.தீர்த்தமாட வேணுமென்று தேடு

சிவவாக்கியர்
***************
63.தீர்த்தமாட வேணுமென்று தேடுகின்ற தீனர்காள்

தீர்த்தமாடல் எவ்விடந் தெளிந்துநீ ரீயம்பிலீர்

தீர்த்தமாக வும்முளே தெளிந்தநீ ரிருந்தபின்

தீர்த்தமாக வுள்ளதுஞ் சிவாயவஞ் செழுத்துமே.


தீர்த்தம் = சுத்தம், திருமஞ்சனநீர், திருவிழா, தீ, நீர், பிறப்பு, பெண்குறி, யாகம், புண்ணிய தீர்த்தம்.

புண்ணிய தீர்த்தங்களாகிய புட்கரணிகளில் நீராடவேண்டுமென்று சொல்லுகின்ற அறிவிலிகளே! எங்கே சென்று தீர்த்தமாட வேண்டும் என்று தெளிந்து தெரியாமல் சொல்லமுடியாது திகைக்கிறீர்கள். தீயும் நீரும் சேர்ந்து இருக்கும் இடமாகிய கண்வழி சென்று, கபாலக் குகைக்குள்ளே உள்ள தடாகமாம் புட்கரணியிலே சென்று பாருங்கள். அதுவே பாற்கடல்; அங்கேதான் எம்பெருமானாம் திருமால்(முகுளம்) மிதந்து பள்ளி கொண்டுள்ளார். அஞ்செழுத்து மந்திரமாம் "நமசிவய"வால் ஆகிய இந்த உடலின் கைலாயப் பகுதியாம் தலையின் உள்ளே இருக்கிறது. அங்கு சென்று நீராடுங்கள்.

0 Comments: