Tuesday, January 01, 2008

62.கருவிருந்து வாசலாற் கலங்குகின்ற

சிவவாக்கியர்
**************
62.கருவிருந்து வாசலாற் கலங்குகின்ற வூமைகாள்

குருவிருந்து சொன்னவார்த்தை குறித்து நோக்கவல்லீரேல்

உருவிலங்கு மேனியாகி யும்பராகி நின்றநீர்

திருவிலங்கு மேனியாகச் சென்று கூடலாகுமே.


உம்பராகி = உயர்வுற்று
உருவு = அச்சம்

கருக்குழியின் மயக்கத்தால் கலங்கி வாய்மூடி மவுனம் காக்கும் ஊமைகளே!
குருவின் உபதேசத்தில் குறித்த இடமாம் நாசி நுனியில் ஊசிப்பார்வை வைத்து நோக்கும் வல்லமை உள்ளவராயிருந்தால் அச்சம் துலங்கும் உடலை உடைய நீங்கள், உயர்வடைந்து, திருவாகிய இறைவன் நடமாடும் உடலுடன் அவனை இனங்கண்டு அவனுடன் கூடலாகுமே!

0 Comments: