Tuesday, January 01, 2008

61.மையடர்ந்த கண்ணினார் மயக்கிடும்

சிவவாக்கியர்
**************
61.மையடர்ந்த கண்ணினார் மயக்கிடும் மயக்கிலே

மையிறந்து கொண்டுநீங்க ளல்லலுற் றிருப்பீர்காள்

மெய்யடர்ந்த சிந்தையால் விளங்குஞான மெய்தினால்

உய்யடர்ந்து கொண்டுநீங்க ளூழிகாலம் வாழ்விரே!


மைபூசிக் கருமைபெற்ற கண்களை உடைய மயக்கும் கன்னிகளின் மயக்கத்திலே ஆழ்ந்து அவதியுறும் மக்களே!பொய்க் கலப்பில்லாத சிந்தையை உள்ளுணர்வு நிலைக்குக் கொண்டு செல்லும் நிலையைத் தெளிவாக அறிந்து செம்மையாகச் செய்ய இயலுமாயின் மறலியாம் மரணத்தை வென்று அழிவற்று வாழலாம்.

0 Comments: