Tuesday, January 01, 2008

60.அண்டம்நீ யகண்டம்நீ யாதிமூல

சிவவாக்கியர்
***************
60.அண்டம்நீ யகண்டம்நீ யாதிமூல மானநீ

கண்டம்நீ கருத்தும்நீ காவியங்க ளானநீ

புண்டரீக மற்றுளே புணருகின்ற புண்ணியர்

கொண்டகோல மானநேர்மை கூர்மையென்ன கூர்மையே!


கண்டம் = எல்லை
புண்டரீகம் = வெண்தாமரை
கூர்மை = அறிவு
நேர்மை = நுண்மை

அண்டம், அகண்டம், ஆதிமூலம், எல்லை, மனிதனின் கருத்து, காவியம் ஆகிவைகளாய் விளங்கும் இறைவா! அறிவுக்கும் அறிவே! புண்டரீகம் என்னும் வெண்தாமரையினுள்ளே, தத்தம் சூரிய, சந்திர, அக்கினி கலைகளை ஒன்று சேர்த்துத் தவம் இயற்றும் புண்ணியர்கள் உணரும் நுண்மையான உணர்வுதான் நீ.

0 Comments: