சிவவாக்கியர்
***************
60.அண்டம்நீ யகண்டம்நீ யாதிமூல மானநீ
கண்டம்நீ கருத்தும்நீ காவியங்க ளானநீ
புண்டரீக மற்றுளே புணருகின்ற புண்ணியர்
கொண்டகோல மானநேர்மை கூர்மையென்ன கூர்மையே!
கண்டம் = எல்லை
புண்டரீகம் = வெண்தாமரை
கூர்மை = அறிவு
நேர்மை = நுண்மை
அண்டம், அகண்டம், ஆதிமூலம், எல்லை, மனிதனின் கருத்து, காவியம் ஆகிவைகளாய் விளங்கும் இறைவா! அறிவுக்கும் அறிவே! புண்டரீகம் என்னும் வெண்தாமரையினுள்ளே, தத்தம் சூரிய, சந்திர, அக்கினி கலைகளை ஒன்று சேர்த்துத் தவம் இயற்றும் புண்ணியர்கள் உணரும் நுண்மையான உணர்வுதான் நீ.
Tuesday, January 01, 2008
60.அண்டம்நீ யகண்டம்நீ யாதிமூல
Posted by ஞானவெட்டியான் at 9:51 AM
Labels: சிவவாக்கியர் பாடல்கள்
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment