சிவவாக்கியர்
**************
59.அறத்திரங்க ளுக்குநீ மகண்டமெண் டிசைக்கும்நீ
திறத்திரங்க ளுக்குநீ தேடுவார்கள் சிந்தைநீ
உறக்கம்நீ யுணர்வுநீ யுட்கலந்த சோதிநீ
மறக்கொணாத நின்கழற் மறப்பினுங் குடிகொளே.
திரம் = உரம், உறுதி, நிலை, பலன், முத்தி
திறம் = அதிகம், உறுதி, காரணம், குணம், குறை, கூறுபாடு, தத்துவம், தன்மை, திறமை, பக்கம், மருத்துவம், மேன்மை, வகை, வலி
அறத்தின் பலனாகிய முத்தி நீ; அகண்ட எட்டு திசைக்கும் அதிபதி நீ; தத்துவத்தின் உறுதி, அதனால் கிட்டும் முத்தி நீ; உண்மை எதுவெனத் தேடுவோரின் சிந்தையும் நீ; உறக்கமாகிய தூக்கமும் நீ; உணர்வு நீ; அவ்வுணர்வில் உட்கலந்து நிற்கும் சோதி நீ; மறக்கமுடியாத உன் திருவடியை மறந்தவரிடமும் குடிகொண்டிருக்கும் சீவனாகிய சிவமும் நீயே.
Tuesday, January 01, 2008
59.அறத்திரங்க ளுக்குநீ மகண்டமெண்
Posted by ஞானவெட்டியான் at 9:50 AM
Labels: சிவவாக்கியர் பாடல்கள்
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment