Tuesday, January 01, 2008

59.அறத்திரங்க ளுக்குநீ மகண்டமெண்

சிவவாக்கியர்
**************
59.அறத்திரங்க ளுக்குநீ மகண்டமெண் டிசைக்கும்நீ

திறத்திரங்க ளுக்குநீ தேடுவார்கள் சிந்தைநீ

உறக்கம்நீ யுணர்வுநீ யுட்கலந்த சோதிநீ

மறக்கொணாத நின்கழற் மறப்பினுங் குடிகொளே.


திரம் = உரம், உறுதி, நிலை, பலன், முத்தி
திறம் = அதிகம், உறுதி, காரணம், குணம், குறை, கூறுபாடு, தத்துவம், தன்மை, திறமை, பக்கம், மருத்துவம், மேன்மை, வகை, வலி

அறத்தின் பலனாகிய முத்தி நீ; அகண்ட எட்டு திசைக்கும் அதிபதி நீ; தத்துவத்தின் உறுதி, அதனால் கிட்டும் முத்தி நீ; உண்மை எதுவெனத் தேடுவோரின் சிந்தையும் நீ; உறக்கமாகிய தூக்கமும் நீ; உணர்வு நீ; அவ்வுணர்வில் உட்கலந்து நிற்கும் சோதி நீ; மறக்கமுடியாத உன் திருவடியை மறந்தவரிடமும் குடிகொண்டிருக்கும் சீவனாகிய சிவமும் நீயே.

0 Comments: