Tuesday, January 01, 2008

57.போதடா வெழுந்ததும் புலனாகி

சிவவாக்கியர்
****************
57.போதடா வெழுந்ததும் புலனாகி வந்ததும்

தாதடா புகுந்ததும் தானடா விளைந்ததும்

ஓதடா வஞ்சுமூன்று மொன்றதான வக்கரம்

ஓதடா விராமராம ராமவென்னும் நாமமே.


போது = காலம், மலரின் மொட்டு
தாது = விந்து
அஞ்சுமூன்று = எட்டெழுத்து

காலம் வந்து வாலிபம் எய்தியவுடன், விந்து புனல்போல் ஊற்றெடுக்கும். அந்த விந்து தானாக உள்ளே புகுந்து விளைய ஆரம்பிக்கும். அவ்வேளையிலே, எட்டெழுத்து மந்திரமாம்,"ஓம் நமோ நாராயணா" என்னும் எட்டெழுத்து முனுத்தத்தை(மந்திரத்தை) ஓதுங்கள்.

"ராம ராம ராமா" என்பதும் முனுத்தமே. எந்த ஒரு இறையின் நாமத்தை ஓதினும், மனம் சலனமற்று இருத்தல் வேண்டும். சிரஞ்சீவியான அநுமன் ஓதித் தவமியற்றியது இம்முனுத்தத்தைத்தான் என்கிறது நூல்கள்.
எட்டெழுத்து மந்திரம் என்பது, "ஓம் நமோ நாராயணா".

0 Comments: