சிவவாக்கியர்
**************
56.உற்றநூல்க ளும்முளே யுணர்ந்துணர்ந்து பாடுவீர்
பற்றறுத்து நின்றுநீர் பராபரங்க ளெய்துவீர்
செற்றமாயை யுள்ளாரைச் செருக்கறுத் திருத்திடில்
சுற்றமாக வும்முளே சோதியென்றும் வாழுமே.
செற்றம் = சினம், வெறுப்பு
சினம், வெறுப்பு ஆகிய மாயையில் மூழ்கியுள்ளோரின் செருக்காகிய கருவத்தை நீக்கி அவர்களைத் திருத்தினால், நம்முள்ளே(நம் உடலினுள்ளே) ஒளிஉருவாய் இறை என்றும் வாழும். இறைமணங் கமழும் நூல்களையும், அதன் உள்வயண முனுத்தங்களையும் (மந்திரங்கள்) உணர்ந்து, உணர்ந்து நம் மனதினுள்ளே உருவேற்ற, பற்றாகிய மாயை அழிந்துபடும். அந்நிலை கிட்டினால் பராபரமாகிய சீவனை அறியலாம். இறையொடு உணர்வால் ஒன்றலாம்.
Tuesday, January 01, 2008
56.உற்றநூல்க ளும்முளே யுணர்ந்து
Posted by ஞானவெட்டியான் at 9:47 AM
Labels: சிவவாக்கியர் பாடல்கள்
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment