சிவவாக்கியர்
*****************
54.தில்லைநா யகனவன் திருவரங் கனுமவன்
எல்லையான புவனமு மேகமுத்தி யானவன்
பல்லுநாவு முள்ளபேர் பகுந்துகூறி மகிழுவார்
வல்லபங்கள் பேசுவார் வாய்புழுத்து மாய்வரே!
தில்லை அம்பலத்திலே களிநடனம் புரியும் நடராசப் பெருமானும் அவனே!
திருவரங்கத்தில் அறிதுயிலில் ஆழ்ந்திருந்து அருள் புரிபவனும் அவனே! புவனங்கள் அனைத்துக்கும் ஒரே மூர்த்தியாகப் புலப்பட்டு(புலன்+பட்டு) ஏகமுத்தி தருபவனும் அவனே! இதையெல்லாம் உணராமல், பல்மேல் நாக்குப் போட்டு பிரித்துப் பேசி அற்பத்தனமான மகிழ்ச்சி அடைபவர்கள் சிலர்; தன்னை வல்லவர்கள் என நினைத்துக்கொண்டு இதையே மாற்றி மாற்றிப் பேசுபவர்கள் சிலர்; இவர்கள் எல்லோரும் வாய் புழுத்துச் சாவார்கள்.
Tuesday, January 01, 2008
54.தில்லைநா யகனவன் திரு
Posted by ஞானவெட்டியான் at 9:44 AM
Labels: சிவவாக்கியர் பாடல்கள்
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment