சிவவாக்கியர்
**************
53.நாழியும் நாழியுப்பு நாழியான வாறுபோல்
ஆழியோனு மீசனு மமர்ந்துவாழ்ந் திருந்திடம்
எருதிலேறு மீசனு மியங்குசக்ரத் தரனையும்
வேறுகூறு பேசுவார் வீழ்வர்வீ ணரகிலே!
நாழி = ஒருபடி
நாழியுப்பு = ஒரு படியின் எல்லை
படியும், படியின் எல்லையும் படிக்குள் அடக்கம். ஆழ்கடலில் துயின்று கொண்டுள்ள சக்கரத்தைக் கையிலேந்தும் நாரணனும், எருதின்மீது அமர்ந்துள்ள அரனும், வேறு வேறு என உடலின் தத்துவம் அறியாமல் பேசுவார்கள். இதை அறியாதவர்கள் நரகில் வீழ்வார்.
Tuesday, January 01, 2008
53.நாழியும் நாழியுப்பு நாழியான
Posted by ஞானவெட்டியான் at 9:42 AM
Labels: சிவவாக்கியர் பாடல்கள்
Subscribe to:
Post Comments (Atom)
2 Comments:
ஒரு நாழி நீரும், ஒரு நாழி உப்பும் கலந்து, இரு நாழி ஆகாமல், ஒரு நாழியாகவே ஆவதுபோல், என்று ஒரு விளக்க உரை இப்பாடலுக்குப் படித்திருந்தேன்.
அன்பு ஹரன்,
//ஒரு நாழி நீரும், ஒரு நாழி உப்பும் கலந்து, இரு நாழி ஆகாமல், ஒரு நாழியாகவே ஆவதுபோல்,//
"நாழியும் நாழியுப்பு நாழியான வாறுபோல்"
என்றுதான் பாடலில் உள்ளது. நீர் என்று எங்கேயும் வரவில்லை.
ஆகவே,"படியும், படியின் எல்லையும் படிக்குள் அடக்கம்" என்றுதான் கொள்ளவேண்டும்.
இதுதான் எம் புரிதல்.
Post a Comment