Tuesday, January 01, 2008

51.ஆடுகாட்டி வேங்கையை யகப்படுத்து

சிவவாக்கியர்
***************
51.ஆடுகாட்டி வேங்கையை யகப்படுத்து மாறுபோல்

மாடுகாட்டி யென்னைநீ மதிமயக்க லாகுமோ

கோடுகாட்டி யானையைக் கொன்றுரித்த கொற்றவா

வீடுகாட்டி யென்னைநீ வெளிப்படுத்த வேணுமே!


ஆடு ஒன்றைக் கட்டிப்போட்டு, அதைக் காட்டி வேங்கையைப் பிடிப்பதுபோல், செல்வம் என்னும் இரையைக் காட்டி என் புத்தியை மயக்கலாமோ?
இலைக் கொம்பாகிய கோடுதனைக் காட்டி யானையக் கொன்று தோலை உரித்த என் கொற்றவனாம் இறைவா, நான் வாழவேண்டிய இறைவீட்டைக் காட்டிக்கொடுத்து, என்னை மதி மயக்கத்திலிருந்து வெளியேற்றிக் காக்கவேண்டும், ஐயா.

0 Comments: