சிவவாக்கியர்
**************
50.கைவழங்கள் கொண்டுநீர் கண்சிமிட்டி நிற்கிறீர்
எவ்விடங்கள் கண்டுநீ ரெண்ணியெண்ணிப் பார்க்கிறீர்
பொய்யுணர்ந்த சிந்தையைப் பொருந்திநோக்க வல்லீரேல்
மெய்கடிந்த தும்முளே விளைந்துகூற லாகுமே!
கைவழம் = வழங்கும் கைப்பழக்கம்
எண்ணி = நினைத்து
எண்ணி = துணிந்து
கடிதல் = அழித்தல்,அறுத்தல், ஒடுக்கல்,சினத்தல்,தடைசெய்தல்,தண்டித்தல், நீக்கல், வெட்டல்.
இறைவனை அடைய, சரியை, கிரியை ஆகிய வழிகளில்(மார்க்கத்தில்) நீங்கள் செய்யும் தான தருமங்கள் போதுமென எண்ணிக்கொண்டு கண் சிமிட்டிக்கொண்டு நிற்கிறீர்கள்.அது தவறு. பின்னர் எந்த இடத்தில் என்று கண்டு நீங்கள் நினைத்துப் பின் துணிந்து பார்த்தால் தெரியும். பொய்யாகிய மாயை எதுவென உணர்ந்த மனமாம் சிந்தையை, நினைவினில் நிறுத்திக் கருத்தினில் பொருத்தி உள்நோக்கும் வல்லமை உண்டெனில் மெய்யாகிய உடலை உள்ளே ஒடுக்கி, விந்துவை விளைவிக்க வைத்து மணியாக்கி இறையுணரலாம்.
Tuesday, January 01, 2008
50.கைவழங்கள் கொண்டுநீர் கண்
Posted by ஞானவெட்டியான் at 6:41 AM
Labels: சிவவாக்கியர் பாடல்கள்
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment