சிவவாக்கியர்
****************
49.சொற்குருக்க ளானதுஞ் சோதிமேனி யானதும்
மெய்க்குருக்க ளாயினும் வேணபூசை செய்கினும்
சற்குருக்க ளாயினுஞ் சாத்திரங்கள் சொல்லினு
மெய்க்குருக்க ளாயினுந் திரண்டுருண்ட தூமையே!
வேதங்களை ஓதி மெய்யாலுமே குருக்களாய் இருந்தாலும், வேண்டிய அளவு பூசைகள் செய்தாலும், "சற்குரு" எனப் பலராலும் போற்றும் மானிடராய் இருந்தாலும், சாற்றிறங்கள் பல படித்திருப்பினும், தாம் செய்யும் செயல்கள்தாம் தூய்மையானவை எனக்கூறும் மானிடராய் இருந்தாலும், அவர்கள் எல்லாம் தீட்டு என இவர்களால் அழைக்கப்படும் தாயின் சூதகத்தில் இருந்து திரண்டு மனித உடலெடுத்துத் திரண்டு வெளி வந்தவர்கள்தாம்.
முக்கலையைச் சேர்த்துத் தவமியற்றி தம்நிலை கடந்தவர்கள்தாம் மெய்யிலே(உடலிலே) தூய்மையானவராம்.
Tuesday, January 01, 2008
49.சொற்குருக்க ளானதுஞ் சோதிமேனி
Posted by ஞானவெட்டியான் at 6:40 AM
Labels: சிவவாக்கியர் பாடல்கள்
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment