சிவவாக்கியர்
***************
48.தூமைதூமை யென்றுளே துவண்டலையு மேழைகாள்
தூமையான பெண்ணிருக்கத் தூமைபோன தெவ்விடம்
ஆமைபோல முழுகிவந் தனேகவேத மோதுறீர்
தூமையுந் திரண்டுருண்டு சொற்குருக்க ளானதே.
எந்தச் செயலும் தூய்மையானதல்ல; கெட்டதாகவே(தூமை=தீட்டு) இருக்கின்றன; எனும் சஞ்சலத்தால் அலைக்கழிக்கப்படும் மனிதர்கள், ஒழுக்கமற்ற தூய்மையற்ற பெண்ணைக் கண்டதும் மனம் மயங்கி அப்பெண்ணின் பின் அலைவது ஏன்? அப்பொழுது அவர்கள் கூறும் அந்தத் தூய்மை எங்கே போனது? ஆமையைப்போல் நீரில் முழுகிவிட்டு, அழுக்கு போய்விட்டதா என்றுகூடப் பார்க்காமல், சுத்தமாய்த்தான் இருக்கிறோமென்று சொல்லிக்கொண்டு வாயால் மட்டும் எண்ணிலடங்கா முனுத்தங்களைச்(மந்திரங்கள்) சொன்னால் மட்டும் போதுமா? நற்பயன் கிட்டுமா?
சலனமற்ற மனம் ஒருநிலைப்பட்டுத் தவத்தில்(முக்கலையொன்றித்தல்) நின்றால் மட்டுமே அழுக்கற்ற சிவத்தின் தன்மையை உணரலாம்.
Tuesday, January 01, 2008
48.தூமைதூமை யென்றுளே துவண்டலையு
Posted by ஞானவெட்டியான் at 6:38 AM
Labels: சிவவாக்கியர் பாடல்கள்
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment