சிவவாக்கியர்
****************
ஒடுக்க நிலை
*****************
44.சித்தமற்று சிந்தையற்று சீவனற்று நின்றிடம்
சத்தியற்று சம்புவற்று சாதிபேத மற்றுநன்
முத்தியற்று மூலமற்று மூலமந்தி ரங்களும்
வித்தையித்தை யீன்றவித்தில் விளைந்ததே சிவாயமே.
சித்தம், மனம், சீவன், சத்தி, சிவம், சாதி மத பேதம், முத்தி, மூலாதாரம், மூலமந்திரம், கற்ற கல்வி, வித்தைகள் ஆகிய அனைத்தையும் ஒதுக்கிவிட்டு, சூரிய சந்திர கலைகளாகிய இரு கண்களாலும் உள்ளே நோக்கி அக்கினி கலையுடன் கலந்து மேலேற்றி ஆகாயத்தாமரையில் சிவத்துடன் சலனமற்று ஒன்றியிருக்க, அதுவே சிவாயமாம்.
Tuesday, January 01, 2008
44.சித்தமற்று சிந்தையற்று சீவனற்று
Posted by ஞானவெட்டியான் at 6:25 AM
Labels: சிவவாக்கியர் பாடல்கள்
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment