Tuesday, January 01, 2008

43.சித்தமேது சிந்தையேது சீவனேது

சிவவாக்கியர்
****************
கடவுள் நிலை

*****************


43.சித்தமேது சிந்தையேது சீவனேது சித்தரே

சத்தியேது சம்புவேது சாதிபேத மற்றது

முத்தியேது மூலமேது மூலமந்தி ரங்களேது

வித்திலாத வித்திலே யின்னதென் றியம்புமே?


விதையின்றி மரம் வருவதில்லை; அம்மரம் பூத்துக் காய்க்காவிடில் விதை இல்லை. அதுபோல், சித்தம், சிந்தை, சீவன் ஆகியவைகள் எல்லாம் உடலின் உள்ளேயுள்ள சிவத்தில்(ஆன்மா) ஒடுங்க, ஒருவனுக்கு சத்தியாம் அம்மையில்லை; சம்புவாகிய சிவமில்லை; சாதிபேதமில்லை; முத்தியும் கிடையாது; மூலம் என்று சொல்லப்படும் மூலாதாரம் கிடையாது; மூலமந்திரங்கள் கிடையாது.

உள்ளம், மனம் யாவும் சிவத்தொடு ஒடுங்கி ஒன்றாக, அவனுக்கு மூலாதாரம், மூலமந்திரங்கள் வேண்டாம்; முத்தியும் வேண்டாம். மவுனத்தில் அழுந்தி இருத்தலே அவன் வேண்டுவது; அப்பொழுது அவனுக்கு இறை எதுவும் வேண்டாம். அப்படியெனில் தூல வழிபாடு தேவையில்லை.

0 Comments: