சிவவாக்கியர் பாடல்கள்
****************************
41.பிறப்பதற்கு முன்னெலா மிருக்குமாற தெங்ஙனே
பிறந்துமண் ணிறந்துபோ யிருக்குமாற தெங்ஙனே
குறித்துநீர் சொலாவிடிற் குறிப்பிலாத மாந்தரே
அறுப்பனே செவியிரண்டு மஞ்செழுத்து வாளினால்.
கருத்து(குறிப்பு) இல்லாதா மாந்தர்களே! பிறப்பதற்கு முன் நீங்கள் இருந்தது எங்கே? பிறந்தபின்பு இறந்தபின்னர் போவதுதான் எங்கே? இவ்விரு வினாக்களுக்கும் விடை சொல்லாவிடில் "நமசிவய" என்னும் ஐந்தெழுத்து வாளினால் உங்களின் காதுகளை அறுப்பேனே.
சூக்கும உடலான ஆன்மா அழிவதில்லை. பிறப்பதற்குமுன் ஆன்மா இறைவனுடன் கலந்திருக்கும். பிறவி எடுக்கும்பொழுது ஆன்மத் துகள் பிரிந்துவந்து உடலில் குடிகொள்ளும். பின்னர் இறக்கும்போது அது ஆகாயவெளியாம் அண்டத்திற்குப் போய்விடும்.
Tuesday, January 01, 2008
41.பிறப்பதற்கு முன்னெலா மிருக்குமாற
Posted by ஞானவெட்டியான் at 6:21 AM
Labels: சிவவாக்கியர் பாடல்கள்
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment