Tuesday, January 01, 2008

40.ஓதுகின்ற வேதமெச்சி லுள்ள

சிவவாக்கியர்
***************
40.ஓதுகின்ற வேதமெச்சி லுள்ளமந் திரங்களெச்சில்

மோதகங்க ளானதெச்சில் பூதலங்க ளேழுமெச்சில்

மாதிருந்த விந்துவெச்சில் மதியுமெச்சி லொலியுமெச்சில்

எதிலெச்சி லிலதில்லை யில்லையில்லை யில்லையே!


வேதியர்களே! நீங்கள் ஓதுகின்ற வேதம் வாயிலிருந்து வெளியே வருவதால் எச்சில். பலுக்கும் முணுத்தங்கள் (மந்திரங்கள்) எச்சில். இருபாலாருக்குமிடையில் இணக்கம் (மோதகம்) வந்தபின் அதுவும் எச்சில். மாதின் கருப்பையில் விழும் விந்து எச்சில். பூமிகள் ஏழும் எச்சில். சந்திரனும் எச்சில். ஒலிக்கும் ஒலியும் எச்சில். இவற்றுள் (அண்டங்களில்) எதில் எச்சில் இல்லையென அறுதியிட்டுக் கூறுவீரே!

0 Comments: