Tuesday, January 01, 2008

39.வாயிலே குடித்தநீரை யெச்சிலென்று

சிவவாக்கியர்
**************
39.வாயிலே குடித்தநீரை யெச்சிலென்று சொல்லுறீர்;

வாயிலே குத்தப்புவேத மெனப்படக் கடவதோ?

வாயினெச்சில் போகவென்று நீர்தனைக் குடிப்பீர்காள்;

வாயினெச்சில் போனவண்ணம் வந்திருந்து சொல்லுமே!


வாயில் உள்ள எச்சி போகவேண்டுமென நீர்தனைக் குடிப்போரே!
வாயிலுள்ள எச்சில் போக்கிப் பின்னர் எச்சில்லாத வாயுடன் வந்து என் வினாவுக்கு விடை சொல்லுங்களேன்.

வாயிலே குடித்த நீரை எச்சில் என்று சொல்லுகிறீர். ஆனால் வாயிலேயிருந்து துப்பும் வார்த்தகளாலான வேதமும் எச்சியன்றோ? ஆனால் அதை மட்டும் வேதமெனக் கூறுதல் எங்ஙனம்?

0 Comments: