சிவவாக்கியர் பாடல்கள் - 37
***********************************
37.கலத்தில் வார்த்து வைத்தநீர் கடுத்ததீமுடுக்கினால்
கலத்திலே கரந்ததோ கடுத்ததீ குடித்ததோ
நிலத்திலே கரந்ததோ நீள்விசும்பு கொண்டதோ
மனத்தின்மாயை நீக்கிலே மனத்துள்ளே கரந்ததே
மிகுந்த வெப்பத்துடன் கூடிய தீயை மூட்டினால் மட்பாண்டத்திலே ஊற்றிவைத்த நீர் ஆவியாகிப் போய்விடும். அதை கலம் (உண்டதெனக்)மறைத்ததெனக் கொள்ளலாமா? அல்லது தீ குடித்துவிட்டதெனக் கூறலாமா?
நிலத்திலே மறைந்துவிட்டதென்பதா? நீள்விசும்பாகிய ஆகாயம் உட்கொண்டுவிட்டதென்பதா?
அதுபோல், இந்த மட்பாண்டமாகிய உடலில் உள்ள சீவனாகிய சிவம் மாயையைப் புறந்தள்ள மனத்துள்ளே மறைந்திருக்கும்.
Tuesday, January 01, 2008
37.கலத்தில் வார்த்து வைத்தநீர்
Posted by ஞானவெட்டியான் at 6:09 AM
Labels: சிவவாக்கியர் பாடல்கள்
Subscribe to:
Post Comments (Atom)
4 Comments:
Your blog to some extent answer my recent question comes to my my mind often WHO AM I
My dear TRC,
"WHO AM I?"
If you start contemplating on this, you will be ulitimately led to WISDOM.
That is what RAMANA MAHARISHI said.
பல முறை படித்த பாடல் ஐயா. விளக்கம் சொன்னதற்கு மிக்க நன்றி.
அன்பு குமரா,
மிக்க நன்றி
Post a Comment