சிவவாக்கியர் பாடல்கள்
*****************************
35.பூசைபூசை யென்றுநீர் பூசைசெய்யும் பேதைகாள்
பூசையுன்ன தன்னிலே பூசைகொண்ட தெவ்விடம்
ஆதிபூசை கொண்டதோ வனாதிபூசை கொண்டதோ
ஏதுபூசை கொண்டதோ வின்னதென் றியம்புமே!
இறைவன் உனக்குள்ளே இருப்பதை அறியாது, அவனை எந்த இடத்தில் பூசிப்பது என அறியாது, பூசை பூசை என நீர் இரைத்துப் பூசைகள் பல செய்யும் பேதைகளே!
இறைவனுக்கு ஆதியுமில்லை! அந்தமுமில்லை!
இறைவன் இருப்பதோ உனக்குள்ளே.
நீங்கள் செய்த பூசைகளை ஆதியான விந்து ஏற்றுக்கொண்டதோ?
அனாதியான ஆகாயம் ஏற்றுக்கொண்டதோ?
இல்லை வேறு யார் ஏற்றுக்கொண்டார்களோ?
என்னவெனக் கூறுங்களேன்.
Tuesday, January 01, 2008
35.பூசைபூசை யென்றுநீர் பூசை
Posted by ஞானவெட்டியான் at 6:06 AM
Labels: சிவவாக்கியர் பாடல்கள்
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment