Tuesday, January 01, 2008

33.கோயிலாவ தேதடா குளங்களாவ

சிவ வாக்கியர் - 33
******************
யோக நிலை
************
33.கோயிலாவ தேதடா குளங்களாவ தேதடா
கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே
கோயிலும் மனத்துளே குளங்களு மனத்துளே
ஆவது மழிவது மில்லையில்லை யில்லையே.

கோயில் குளங்கள் ஆகியவற்றிற்குச் சென்று கும்பிடும் அறிவற்றவர்களே! கோயில், குளங்கள் ஆகியவை நம் மனத்துள்ளே இருக்க, அவற்றை இனம் கண்டுகொண்டு பூசிக்க பிறப்பு, இறப்பு ஆகியவைகளில்லை. இல்லை. இல்லையே.

0 Comments: