சிவ வாக்கியர் - 31
*******************
31.செய்யதெங்கி லேயிளநீர் சேர்ந்தகார
.............ணங்கள்போல்
ஐயன்வந்து என்னுளம் புகுந்துகோயில்
.............கொண்டனன்
ஐயன்வந்து என்னுளம் புகுந்துகோயில்
..............கொண்டபின்
வையகத்தில் மாந்தர்முன்னம் வாய்திறப்ப
................தில்லையே.
உயர்ந்து வளர்ந்த தென்னை மரத்திலே இளநீர் எப்படி வந்ததோ, அப்படியே ஐயன் வந்து என்னுளம் புகுந்து கோயில் கொண்டனன். அதர்குப் பின் இவ்வுலகில் மனிதர்களுக்குமுன் நான் வாய்மூடி மவுனியாகி விட்டேன்.
இறைவன் எப்பொழுது எவனொருவன் உள்ளத்தில் கோயில் கொள்ளுகிறானோ அப்பொழுதே அவன் மவுனியாகி விடுவான். நாவடங்கி விடும். இதுவே நாவடக்கம்.
Tuesday, January 01, 2008
31.செய்யதெங்கி லேயிளநீர்
Posted by ஞானவெட்டியான் at 5:45 AM
Labels: சிவவாக்கியர் பாடல்கள்
Subscribe to:
Post Comments (Atom)
1 Comment:
நல்ல விளக்கம்.
Post a Comment