Tuesday, January 01, 2008

30.பாட்டிலாத பரமனை பரமலோக

சிவ வாக்கியர் - 30
*******************
30.பாட்டிலாத பரமனை பரமலோக
...........நாதனை
நாட்டிலாத நாதனை நாரிபங்கர்
..........பாகனை
கூட்டிமெள்ள வாய்புதைத்து குணுகுணுத்த
..........மந்திரம்
வேட்டகாரர் குசுகுசுப்பை கூப்பிடா
...........முநின்றதே.


பாட்டிலாத பரமனை, பரமலோக நாயகனை, நாடு இல்லாத நாதனை, உமையொருபாகனை நினைத்து மெள்ள வாய் புதைத்து குணுகுணு என்று ஓதிய மந்திரங்களைவிட, வேட்டைக் காரனான கண்ணப்பன் இரகசியமாய்க் குசுகுசு எனக் கூப்பிடுவதற்குமுன் நிற்பான் ஈசன்.

0 Comments: