சிவ வாக்கியர் - 29
*******************
யோக நிலை
**************
29.நெருப்பைமூட்டி நெய்யைவிட்டு நித்த
..............நித்த நீரிலே
விருப்பமோடு நீர்குளிக்கும் வேதவாக்கியங்
..............கேளுமின்
நெருப்புநீரு மும்முளே நினைந்துகூர
..............வல்லிரேல்
சுருக்கமற்ற சோதியைத் தொடர்ந்துகூட லாகுமே.
நித்தமும் விருப்பத்துடன் நீரிலே குளித்து, நெருப்பைமூட்டி நெய்யை அதில் விட்டு எரித்து அக்கினி வளர்த்து யாகம் செய்வோரே, ஒரு வேத வாக்கியத்தைக் கேளுங்கள்.
நெருப்பும் நீரும் நமக்குள்ளே ஒரே இடத்தில் உள்ளது. அது எந்த இடம்? நீரும் நெருப்பும் ஒரே இடத்தில் இருப்பின் நெருப்பு அணைந்துவிடுமே? ஆம். இறைவனின் படைப்பில் நெருப்பும் நீரும் இருக்குமிடம் அவனவன் கண்களே.
அதுவே உணர்வு உடல் அடைய வழி. இதன் வழியாகச் செல்ல சோதி உருவாய் இருக்கும் சீவனைக் கூடலாம்.
Tuesday, January 01, 2008
29.நெருப்பைமூட்டி நெய்யைவிட்டு
Posted by ஞானவெட்டியான் at 5:44 AM
Labels: சிவவாக்கியர் பாடல்கள்
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment