சிவ வாக்கியர் - 28
*******************
28.அண்டர்கோ னிருப்பிட மறிந்துணர்ந்த
............ஞானிகள்
பண்டறிந்த பான்மைதன்னை யாரறிய
.............வல்லரோ
விண்டவேத பொருளையன்றி வேறுகூற
............வகையிலா
கண்டகோயில் தெய்வமென்று கையெடுப்ப
............தில்லையே.
அண்டர் = சிவன், கர்த்தா
பண்டு = ஞானம், கல்வி, பழமை;
பான்மை=தன்மை, குணம், தகுதி,பங்கு
சீவனின் இருப்பிடமறிந்த ஞானிகள் வேதத்தில் சொல்லிய பொருளயன்றி வேறுகூறாமல், ஞானம் அறிந்துணர்ந்த தன்மைதனை யாரும் அறிய முடியாது. இத்தகைய பக்குவமடைந்தவர்கள் கண்ட(பார்த்த) கோயிலில் இருப்பதெல்லாம் தெய்வம் எனக் கையெடுத்துக் கும்பிடுவதில்லையே.
Tuesday, January 01, 2008
28.அண்டர்கோ னிருப்பிட மறிந்து
Posted by ஞானவெட்டியான் at 5:43 AM
Labels: சிவவாக்கியர் பாடல்கள்
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment