Tuesday, January 01, 2008

28.அண்டர்கோ னிருப்பிட மறிந்து

சிவ வாக்கியர் - 28
*******************
28.அண்டர்கோ னிருப்பிட மறிந்துணர்ந்த
............ஞானிகள்
பண்டறிந்த பான்மைதன்னை யாரறிய
.............வல்லரோ
விண்டவேத பொருளையன்றி வேறுகூற
............வகையிலா
கண்டகோயில் தெய்வமென்று கையெடுப்ப
............தில்லையே.

அண்டர் = சிவன், கர்த்தா
பண்டு = ஞானம், கல்வி, பழமை;
பான்மை=தன்மை, குணம், தகுதி,பங்கு

சீவனின் இருப்பிடமறிந்த ஞானிகள் வேதத்தில் சொல்லிய பொருளயன்றி வேறுகூறாமல், ஞானம் அறிந்துணர்ந்த தன்மைதனை யாரும் அறிய முடியாது. இத்தகைய பக்குவமடைந்தவர்கள் கண்ட(பார்த்த) கோயிலில் இருப்பதெல்லாம் தெய்வம் எனக் கையெடுத்துக் கும்பிடுவதில்லையே.

0 Comments: