Tuesday, January 01, 2008

27.பண்டுநான் பறித்தெறிந்த பன்மலர்

சிவ வாக்கியர் - 27
*******************
ஞான நிலை
**************
27.பண்டுநான் பறித்தெறிந்த பன்மலர்க
..............ளெத்தனை
பாழிலே செபித்துவிட்ட மந்திரங்க
.............ளெத்தனை
மிண்டராய்த் திரிந்தபோ திரைத்தநீர்க
.............ளெத்தனை
மீளவுஞ் சிவாலயங்கள் சூழவந்த
............தெத்தனை.

பழைய காலத்தில் நான் பூசை செய்கிறேன் எனப் பறித்து எறிந்த மலர்கள் எத்தனை? வீணாகச் செபித்த மந்திரங்கள் எத்தனை?

மிண்டன் = திண்ணியன் = வலிவுடையவன்.

வலிவுடையவனாய்த் திரிந்தபோது இரைத்த நீர்கள் எத்தனை?

இவ்வளவையும் செய்துவிட்டுப் பின் சுற்றிவந்த சிவாலயங்கள் எத்தனை?

0 Comments: