Tuesday, January 01, 2008

26.அண்ணலே யனாதியே யனாதி

சிவ வாக்கியர் - 26
*******************
26.அண்ணலே யனாதியே யனாதிமுன்
............னனாதியே
பெண்ணுமாணு மொன்றலோ பிறப்பதற்கு
............முன்னெலாம்
கண்ணிலாணின் சுக்கிலங் கருதியோங்கு
............நாளிலே
மண்ணுளோரும் விண்ணுளோரும் வந்தவாற
..........தெங்ஙனே.

ஆதி = அந்+ஆதி=அந்(த)+ஆதி=அந்தாதி=அநாதி

அண்ணலாகிய இறை ஆதிப்பொருள். அதுவே அநாதி. அதுவே அந்தமும் ஆதியும். பிறப்பதற்கு முன்னர் சுக்கிலமும் விந்துவும் கூடியபோது அது பெண்ணுமில்லை, ஆணுமில்லை. அலியே. அதைக்குறிக்குமாறுதான் உமையொருபாகனைச் சித்தரித்தனர் முன்னோர். மண்ணில் உள்ளோரும் விண்ணில் உள்ளோரும் வந்தது இப்படித்தான்.

0 Comments: