Tuesday, January 01, 2008

25.ஓடமுள்ள போதெலாம் ஓடியே

சிவ வாக்கியர் - 25
*******************
25.ஓடமுள்ள போதெலாம் ஓடியே
.................உலாவலாம்
ஓடமுள்ள போதெலாம் உறுதிபண்ணிக்
...............கொள்ளலாம்
ஓடமும் உடைந்தபோதங்கு ஒப்பில்லாத
...............வெளியிலே
ஆடுமில்லை கோனுமில்லை ஆருமில்லை ஆனதே.

ஓடமாகிய உடல் உள்ளபோது நம் சீவனைப் பரிபூரணத்துடன் இணைத்துக்கொள்ள வழிதேடி அதை உறுதி செய்து கொண்டிருப்பதை விட்டுவிட்டு, சீவனின் மூலமாம் விந்துவை ஓடிஓடி உலாவி (புணர்ச்சி செய்து) நாசம் (வீணடித்து) விடுகிறோம்.

பின்னர் ஓடம் உடைந்து சீவன் பரதேசம் செல்லும்போது, ஆடு, அதை மேய்க்கும் கோனான் ஆகிய சுற்றம் யாரும் கூட வருவதில்லை.

"வீடு வரை உறவு - வீதிவரை மனைவி - காடுவரை பிள்ளை - கடைசிவரை யாரோ"(கவியரசு)

0 Comments: