Tuesday, January 01, 2008

24.வீடெடுத்து வேள்விசெய்து

சிவ வாக்கியர் - 24
*******************
24.வீடெடுத்து வேள்விசெய்து மெய்யரோடு
.............பொய்யுமாய்
மாடுமக்கள் பெண்டிர்சுற்ற மென்றிருக்கு
...............மாந்தர்காள்
நாடுபெற்ற நடுவர்கையி லோலைவந்
...............தழைத்திடில்
ஓடுபெற்ற தவ்விலை பொறாது
..............காணுமுடலமே.

இந்த உண்மையும் பொய்யும் நிறைந்த உலகிலே, வீடுகட்டி வேள்வி செய்து, மாடு, மக்கள், மனைவி, சுற்றத்தார் என்று வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கும் மாந்தர்களே, எமலோகத்தின் அதிபதியாம் எமனிடமிருந்து ஓலை வந்து அழைத்த பின்னால் இந்த உடல் வெறும் உடைந்த பானை ஓட்டின் விலை கூடப் பெறாது என்பதை அறிந்துகொள்ளுங்கள்.

0 Comments: