Tuesday, January 01, 2008

23.நீளவீடு கட்டுறீர் நெடுங்கதவு

சிவ வாக்கியர் - 23
*******************

23.நீளவீடு கட்டுறீர் நெடுங்கதவு
..............சாத்துறீர்
வாழவேணு மென்றலோ மகிழ்ந்திருந்த
.................மாந்தரே
காலனோலை வந்தபோது கைகலந்து
..................நின்றிடும்
ஆலமுண்ட கண்டர்பாத மம்மைபாத
.................முண்மையே.


வாழவேண்டுமெனும் எண்ணத்தால் நீளமாக வீட்டைக் கட்டிப் பெரிய கதவையும் வைத்துச் சாத்திக்கொள்ளுகிறீர்கள். அந்த நிலைதான் நிலையானது என்று மகிழ்ந்தும் இருக்கிறீர். ஆயினும், மறலியாம் ஏமனோலை பூட்டிய கதவையுந்தாண்டி வந்தபோது என்ன செய்யப் போகிறீர்கள். ஆலவிடமுண்ட அப்பன் பாதமும் அம்மை பாதமும் கலந்து நிற்கும் கை(முகுளம்)யில் பள்ளி கொண்டிருக்கும் எம்பெருமாளை அடைய வழி தெரிந்துகொள்வீர். முக்கலை ஒன்றித்தலாம் வாசியோகம் அறிந்து நினைவாகிய இறைவனைக் கருத்தில் அடைத்து வைக்கத் தெரிந்தால் ஏமனையும் ஏமாற்றலாம்.

0 Comments: