சோதனை ஓட்டம்
Saturday, February 17, 2007
Thursday, February 15, 2007
அந்த நாலுபேருக்கு நன்றி!
அன்புடையீர்,
மீண்டும் ஞானவெட்டியான் வந்துவிட்டான்; அதுவும் புது BLOGGER அடைப்பலகையுடன்.
அது எப்படி? எல்லோரும் தடுமாறும்போது, இவன் மட்டும்?
அதுதான் நன்றி கூறப்போகிறேனே!
1. தீபா கோவிந்த்: சும்மா சொல்லக்கூடாது. மிகவும் பொருமையுடன் கூகுள் டாக்கில் டியூஷன் எடுத்து, 75% ஒவ்வொன்றையும் சொல்லித் தந்தார்கள்.
2.பொன்ஸ்: மாட்டிக்கொண்டபோது ஓடிவந்து உதவி செய்தார்.
3.ஜகத்(ரட்சகன்): Recent comments, Recent Posts widget சேர்க்கமுடியாது புலம்பியபோது வந்து உதவியவர்.
4.ஹான்ஸ்: அவர்தான். Beautiful Beta Blogன் படைப்பாளி. என்னென்னமோ எழுதியிருக்கிறார். இந்த மரமண்டையில் ஏறவில்லை. கொஞ்சம் புரிந்துகொள்ள உதவியது.
இந்த நாலுபேருக்கும் நன்றி! நன்றி!!
என்ன வரினும் வருக! என்று முட்டி மோதி காலநேரம் பாராது செய்து முடித்ததில் எனக்கும் மன திருப்தி.
எல்லோரும் வந்து பார்த்து எப்படி இருக்கிறதென கூறுங்களேன். அப்பொழுதுதானே மற்றவற்றையும் மாற்றமுடியும்.
Posted by ஞானவெட்டியான் at 8:19 PM 14 comments
Labels: ஞானவெட்டியான்
Saturday, February 10, 2007
உதவி தேவை!!!
சில நாட்களுக்குமுன் நம் நண்பர்களில் ஒருவர் புது புளாக்கரின் அடைப்பலகை அகலத்தை விரிவு படுத்துவது குறித்த பதிவு ஒன்றை இட்டிருந்தார். அந்த சுட்டி கிட்டுமா?
Posted by ஞானவெட்டியான் at 12:48 PM 0 comments
Labels: ஞானவெட்டியான்
Friday, February 09, 2007
ஞானவெட்டியான் வகையாக மாட்டிக்கிட்டான்!!
ஞானவெட்டியான் வகையாக மாட்டிக்கிட்டான்!!
தொழில்நுட்ப வல்லுனர்களுக்கு ஒரு அறிவிப்பு.
இதனால் சகலபேர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் Blogger என்னை ஒழிப்பதற்கென்றே வேண்டுமென்றே எல்லா பதிவுகளையும் மாற்றிவிட்டது.
சந்திக்கும் இக்கட்டுகள்:
1.மிகவும் அல்லல்பட்டு இப்பொழுதுதான் பொங்கலுக்கு இருந்த கூரைவீட்டை(template) பழுதுபார்த்தேன். அந்த templateஐ Blogger ஒத்துக்கொள்ளமாட்டேன் என்கிறது.
2.ஒரே e-mail idல் 11 பதிவுகள் உள்ளன. அதற்குத் தனித்தனியாக e-mail id பதிந்து மாற்ற ஒரு பதிவில் இருந்துவரும் 92 இடுகைகளையும் பின்னூட்டத்துடன் export செய்வது எப்படி?
எல்லோரும் வந்து உதவிசெய்யவேண்டுமாய் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இல்லை எனில் njaanam@gmail.comக்கு தங்களின் மின்னஞ்சல் முகரி தந்தால் தனியாகத் தொடர்பு கொள்கிறேன்.
அப்பாடா! தொலைந்தான்!! என்றால் உதவி செய்யாமலும் இருக்கலாம்!!! (நகைச்சுவைக்காக மட்டும்) smily போடத் தெரியவில்லை!!
Posted by ஞானவெட்டியான் at 5:21 PM 17 comments
Labels: ஞானவெட்டியான்
Thursday, February 01, 2007
துக்கச் செய்தி
"செவிக்கினிய செந்தமிழ்ப் பாடல்கள்" வலைப்பூ BLOGGERஆல் கொல்லப்பட்டுவிட்டது.
என்னதான் முயன்றும் காக்க இயலவில்லை. அனைவரும் அஞ்சலி செலுத்துங்கள்.
Posted by ஞானவெட்டியான் at 5:03 PM 28 comments
Labels: ஞானவெட்டியான்






