நவாக்கரி சக்கரம்
**********************
நவாக்கரி சக்கர நானுரை செய்யின்
நவாக்கரி ஒன்று நவாக்கரி யாக
நவாக்கரி எண்பத் தொருவகை யாக
நவாக்கரி யக்கிலீ செளமுத லீறே.
நவாக்கரி = புதுமையான
நவாக்கரியாக = நவாக்கரி சக்கரமாக
கிலீ செளமுத லீறே = "கிலீம்" முதல் " செள " முடிய
திருவருளம்மை யாவருக்கும் வியக்கத் தக்க தன்மையுடைய "வ" கரம் உரியதாம். இவ்வம்மைக்குறிய நவாக்கரி சக்கரத்தை நான் விளக்கப் புகுந்தால் , அது 80 வகையாக எழுத்து மாறுதலால் விரிவடையும். முதலில் "கிலீம்"ல் ஆரம்பித்துப் பின்னர் "செள"வில் முடியும்.
நவாக்கரி யாவது நானறி வித்தை
நவாக்கரி யுள்ளெழும் நன்மைகள் எல்லாம்
நவாக்கரி மந்திர நாவுளே ஓத
நவாக்கரி சத்தி நலந்தருந் தானே.
நவாக்கரி எனப்படும் மந்திரமே யான் அறியும் மெய் உணர்வுக் கலை ஆகும். அதனால் நன்மை எல்லாம் அகத்தே தோன்றும். எந்த ஒரு மந்திரத்தினையும் உதடு பிரியாது, நாவு அசையாது நினைவால் பலுக்க(உச்சரிக்க) வேண்டும். அது போல் இம் மந்திரத்தினையும் நாவு புடைக்கும் அளவு ஒரு மாத்திரையாக வைத்துப் பலுக்க அம்மை எல்லா நலனும் தருவாள்.
Friday, December 28, 2007
நவாக்கரி சக்கரம்
Posted by ஞானவெட்டியான் at 9:51 AM
Labels: ஞானமுத்துக்கள்
Subscribe to:
Post Comments (Atom)
3 Comments:
விளக்கத்துக்கு மிக்க நன்றி ஐயா.
தங்களின் திருமந்திர விளக்கம் மிக அருமை. நன்றி
-செந்து
அன்பு குமரன்,செந்து,
நன்றி
Post a Comment