Wednesday, December 26, 2007

நவராத்திரி - ஐந்தாம் நாள்

நவராத்திரி - ஐந்தாம் நாள்
**********************************

ஐந்தாம் நாள் பராசக்தியை மகேசுவரியாக அலங்கரித்து வழிபடவேண்டும். ரிடப வாகனத்தில் எழுந்தருளியிருக்கும் தருமத்தின் திருவுருவமாம் இச் சிவ சக்தி அளவற்ற பெரும் உடலைக் கொண்டதால் "மகதீ" என அழைக்கப்படுகிறாள். அனைத்து மங்களங்களையும் தருபவள். உழைப்பவருக்கு அருள்பவள்.

இவளை கெளரியாகவும், சிம்ம வாகினியாகவும் பூசிப்போரும் உண்டு.
சும்ப நிசும்ப அவுணர்களை அழித்து அகிலஉலகையும் உய்வித்தவள்.

படையல்: புளியோதரை
துதிக்கவேண்டிய இராகம்: பந்துவராளி

4 Comments:

Anonymous said...

அய்யா,

நவராத்திரி பண்டிகை மூலம் நம்க்க சொல்ல வரும் விசயம் என்னவென்று சுருக்கமாக சொல்லுங்களேன்..

நல்ல பதிவு.

நன்றி

Anonymous said...

அன்பு சிவபாலன்,
நவராத்திரி விழா மூலம் சொல்ல வரும் கருத்தைச் சுருக்கமாக இடுகை எண் - 10ல் கூறியுள்ளேன்.

Anonymous said...

மனதுக்கு இனிய பதிவு.

Anonymous said...

அன்பு ராதாராகவன்,
மிக்க நன்றி.