நவராத்திரி - முதல் நாள்
********************************
மது - கைடபர் எனும் இரு அரக்கர்கள் செய்த அட்டூழியங்கள் தாங்காது வழக்கம்போல் இருடிகளும், தேவர்களும் திருமாலிடம் முறையிட, அவர் தூங்காமல் தூங்கும்போது துர்க்கையை வழிபட்டார். துர்க்கையும், 10 தலைகள், 10 கால்களுடன் நீலநிற ஒளிவீசும் சினம் நிறைந்த கண்களுடன் கோர உருக்கொண்டு, அவதரித்து அரக்கர் இருவரையும் அழித்தாள். அவள் தன் கைகளில் ஏந்தி இருப்பவை:கத்தி,சக்கரம்,கதாயுதம்,அம்பு, வில், கேடயம்,சூலம்,குத்தீட்டி, மண்டைஓடு,சங்கு ஆகியன.
தேவியை அபயம்,வரதம்,புத்தகம்,அக்கரமாலை ஆகியவற்றுடன் கூடிய "குமரி" வடிவில் அலங்கரித்து வழிபடுதல் மரபு என்பார் சிலர். இன்னும் சிலர், சாமுண்டியாகவும், வராகியாகவும் வழிபடல் நன்று என்பார்.
படையல்: தயிர்சாதம்,சக்கரைப் பொங்கல்.
துதிக்கவேண்டிய இராகம்: தோடி
படங்கள் காண: வையம் பதிவில் புன்னை நல்லூர் இடுகைகளைக் காண்க; (அருள்கூர்ந்து அம்மையின் கைகள் குறைகின்றன என முறையிடவேண்டாம். ஏதோ கிட்டியவற்றை இட்டுள்ளேன்)
Wednesday, December 26, 2007
நவராத்திரி - முதல் நாள்
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment