Monday, December 31, 2007

99.பொல்லார்க்குக் கல்விவரிற் கருவமுண்டா

விவேக சிந்தாமணி
********************
99.பொல்லார்க்குக் கல்விவரிற் கருவமுண்டா
............மதனோடு பொருளுஞ் சேர்ந்தால்

சொல்லாலுஞ் சொல்லுவிக்குஞ் சொற்சென்றாற்
...........குடிகெடுக்கத் துணிவர் கண்டாய்
நல்லோர்க்கிம் மூன்று குண முண்டாகி

..........வருளதிக ஞான முண்டாம்

எல்லோர்க்கு முபகார ராயிருந்து
..........பரகதியை யெய்து வாரே.

பொல்லாருக்குக் கல்வியுண்டானால் கர்வம் உண்டாகும். அதோடு கொஞ்சம் பொருளும்(பணமும்) சேர்ந்தால் சொல்லக்கூடாத சொற்களைச் சொல்லவைக்கும். அதற்குமேலும் அவர்களுக்குச் செல்வாக்கும் சேர்ந்தால், பிறருக்கு நல்லதைச் செய்வதை விட்டுவிட்டு, பல கொடியவர்களை ஏவிவிட்டு அடுத்தவரின் குடும்பத்தைக் கெடுக்க எண்ணுவார்கள். ஆனால் நல்ல குணமுடைய நல்லவர்களுக்கு இம்மூன்று நன்மைகளும் கிடைக்குமானால், அவர்கள் எல்லோருக்கும் உதவிசெய்வார்கள்; செல்வாக்கால் பிறருக்கு நன்மை செய்வார்கள். அந்த அறத்தின் செம்மையால் அருள் கிடைக்கும்; அதன் பயனாய் நன்முத்தி கிடைக்கும்.

0 Comments: