Monday, December 31, 2007

100.உந்தியின் சுழியின்கீழ்சே ருரோம

விவேக சிந்தாமணி
*********************
100.உந்தியின் சுழியின்கீழ்சே ருரோமமாங் கரியநாகஞ்
சந்திரனெனவே யெண்ணித் தையலாள் முகத்தைநோக்க

மந்திரகிரிகள் விம்மி வழிமறித் திடுதல்கண்டு

சிந்துரக் கயற்கண்ணோடிச் செவிதனக் குரைத்ததம்மா.


உந்திச் சுழியாகிய நாபிக்கு அடுத்துள்ள உரோமம் அடர்ந்த பகுதி கரிய நாகம்போலுள்ளது. அது தலைவியின் முகத்தைச் சந்திரன் என எண்ணி மேல்நோக்க இரு மலைக்குன்றுகள் வழிமறித்தன. இதைப்பார்த்துச் செவ்வலரி பறந்த கயல்மீன்போலும் கண்கள் ஓடிப்போய் செவிகளுக்குச் சொல்லியதாம்.
இது தலைவியின் அங்கங்களை வருணித்தலாம். இது நீதி உரைக்காமையால் இடைச்செருகல் என்பர் சிலர்.

0 Comments: