Monday, December 31, 2007

101.மாகமா மேடைமீதில் மங்கை

விவேக சிந்தாமணி
***********************
101.மாகமா மேடைமீதில் மங்கைநின் றுலாவக்கண்டு
ஏகமா மதியென்றெண்ணி யிராகுவந் துற்றபோது

பாகுசேர் மொழியினாளும் பற்றியே பாதம்வாங்கத்

தோகைமா மயிலென்றெண்ணித் தொடர்ந்தரா மீண்டதன்றே.


உப்பரிகையில் மங்கைப் பருவமுடைய தலைவி நின்று உலவும்போது அவளின் முகத்தைப் பூரணச் சந்திரன் என்று எண்ணி இராகுவாகிய கரும்பாம்பு அவளைப் பிடிக்க எண்ணி வந்தது கண்டு, கரும்பின்பாகு போன்ற மொழியாள் மனம் பதறி விரைவாகத் திரும்பி நடந்து உள்ளே போக, அவள் நடை மயிலைப்போல் இருப்பது கண்டு இராகு பயந்து திரும்பி ஓடிவிட்டதாம்.

இதையும் இடைச் செருகல் என்பார்கள்.

0 Comments: