Monday, December 31, 2007

102.சலதாரை வீழ்நீருஞ் சாகரந் தன்னை

விவேக சிந்தாமணி
*********************
102.சலதாரை வீழ்நீருஞ் சாகரந் தன்னைச் சார்ந்தாற்
குலமென்றே கொள்வதல்லால் குரைகடல் வெறுத்ததுண்டோ?

புலவர்கள் சபையில்கூடிப் புன்கவியாளர் சார்ந்தால்

நலமென்றே கொள்வதல்லால் நவில்வரோ பெரியோர் குற்றம்?


குரை=ஒலிக்கும்

வீட்டிலிருந்து சாக்கடை வழியாக அருவருக்கத் தக்க கழிவுநீர் எப்பொழுதும் ஒலியெழுப்பிக் கொண்டுள்ள கடலில் கலக்கும்போது, அக்கடல் கழிவு நீரைத் தன் இனமென நினைத்து தன்னோடு சேர்த்துக்கொள்ளுமே அல்லாது அதனை வெறுத்து ஒதுக்குவதுண்டோ? இல்லையாம்; அதுபோல, கவி இலக்கணத்துக்கு ஒவ்வாத, அற்பமான கவிதைகளைப் புனையும் கவிஞர்கள், பேரறிஞர்கள் கூடியுள்ள அவையிலே கலந்து தங்களின் கவிதைகளை வெளியிடும்போது, அவ்வறிஞர்கள் புன்கவிகளை கவிஞர்களென ஏற்றுக்கொள்வார்களே அன்றி வெறுத்து ஒதுக்க மாட்டார்கள்.(குறைகண்டுபிடித்தல் அல்ல; அதுவேறு)

0 Comments: