Monday, December 31, 2007

103.காரெனுங் குழல்கடப்பிக் கடுஞ்சிலை

விவேக சிந்தாமணி
***********************
103.காரெனுங் குழல்கடப்பிக் கடுஞ்சிலை வாளிதப்பி
மேரென வளர்ந்து நின்ற வேழத்தின் கோடுதப்பித்

தாருறு கரியரோமச் சங்கிலிவழியே சென்று

சீரியனென வளர்ந்த செல்வனல் குலிற்கை வைத்தான்.


நேர் வழியே வளர்ந்த செல்வனாகிய தலைவன், கூந்தலாகிய மேகத்துக்கும் புருவமாகிய வில்லம்புகளுக்கும், உயர்ந்து வளர்ந்த யானையின் தலைமுகடு போன்ற பருவச் செழிப்புகட்கும் தப்பி உரோமச் சங்கிலி வழியே சென்று கருக்குழிதனில் கைவைத்தான்.

சிற்றின்பப் பாடலாயுள்ளதால் இடைச்செருகலென்பர். எண் வரிசை கெடலாது எனும் நோக்கத்துடன் ஈங்கு தரப்பட்டுள்ளது.

0 Comments: