Monday, December 31, 2007

104.உண்டதை யொழிக்கும் வாசலோர

விவேக சிந்தாமணி
*********************
104.உண்டதை யொழிக்கும் வாசலோரநீ ரொழித்துமேலே
வண்டலு மழுக்குஞ்சேறு முதிரமு மாறாவாசல்

உண்டத னிருப்பைக்கண்டு பெருங்களி யுள்ளங்கொண்டு

கண்டன ரிளைஞரெல்லாங் கதியெனக் கருதுவாரே.


நாம் உண்டதைச் செரித்துப்பின் வெளித்தள்ளும் மலவாயிலை அடுத்துள்ள உவர் நீர் ஒழுகச் சேறுபோன்ற அழுக்குத் திரண்டு இரத்தம் வரும் வாயில் ஒன்றுண்டு. அதைப்பார்த்த இளைஞர் எல்லாம் மனம் மகிழ்ந்து சுவர்க்கம் இதுவே எனக் கருதுகிறார்கள்.

சிற்றின்பப் பாடலாயுள்ளதால் இடைச்செருகலென்பர். எண் வரிசை கெடலாது எனும் நோக்கத்துடன் ஈங்கு தரப்பட்டுள்ளது.

0 Comments: