Monday, December 31, 2007

105.கரந்தொருவன் கணைதொடுக்க

விவேக சிந்தாமணி
*********************
105.கரந்தொருவன் கணைதொடுக்க மேற்பறக்கும் இராசாளி ................கருத்தும்கண்டே
உரைந்து சிறுகானகத்தி லுயிர்ப் புறாபேடு தனக் குரைக்குங்காலை

விரைந்து விடந்தீண்ட வுயிர்விடும் வேடன்கணையால் வல்லூறும் ...............வீழ்ந்த

தரன்செயலே யாவதல்லாற் தன்செயலால் ஆவதுண்டோ ..............வறிவுள்ளோரே.


கரந்து = மறைந்திருந்து

முன்னொரு காலத்தே, கானகத்திலே ஒரு வேடன் மறைந்திருந்து, மேலே பறக்கும் தம்பதிப் புறாக்களைக் கொல்ல வேண்டி அம்பு தொடுத்துக் குறிவைக்க, அப்பொழுது ஒரு இராசாளியும் தன் உணவுக்காக அதே புறாக்களைக் குறிவைத்துப் பறந்துகொண்டிருந்தது. அப்பொழுது ஆண்புறா தன் பேடையிடம்(பெண் புறா), "நம் நிலையைப் பார்" எனக் கூறியது. அப்பொழுது, வேடனை ஒரு நாகம் தீண்ட அதனால் குறிவைத்த அம்பு புறாக்களைத் தாக்காது இராசாளியைத் தாக்கிக் கொன்றது. இவையெல்லாம் அரன் செயலாலல்லாது, நம்முடைய நற்செயல்களாலாகுமோ? ஆகாது.

இதுபோல், உலகில் கொடியோர், ஒருவருக்குத் தீங்கு செய்ய நினைக்கினும் இறைவன் அருளால் அது நிறைவேறாது தாமே அழிவார்கள்.

0 Comments: