Monday, December 31, 2007

106.கொல்லுலை வேற்கயற்கண் கொவ்வை

விவேக சிந்தாமணி
*********************
106.கொல்லுலை வேற்கயற்கண் கொவ்வையங் கனிவாய்மாதே
நல்லணி மெய்யிற்பூண்டு நாசிகா பரணமீதில்

சொல்லதிற் குன்றிதேடிச் சூடியதென்னா லென்றான்

மெல்லியல் கண்ணும்வாயும் புதைத்தனள் வெண்முத்தென்றாள்.


"கொல்லனுலையில் காய்ச்சிப் பதப்படுத்திக் கூர்மை செய்த வேலாயுதத்தையும் கெண்டைமீனையும் ஒத்த கண்ணாளே! கோவைப்பழம் போல் சிவந்த வாயினை உடயவளே! நல்ல மாற்றுக்குறையாத ஆபரணங்களை உடலில் பூட்டியவளே! உன் மூக்கில் அணிந்திருக்கும் அணிகலனாம் மூக்குத்தியில் மட்டும் குற்றம் பொருந்திய குன்றிமணியை வைத்துள்ள காரணம் என்ன?," எனத் தலைவன் வினவ, தலைவி வெட்கித் தலைகுனிந்து, முகமலரைக் கைகளால் மூடி,"வெண்முத்து" என்றாள்.

இதுவும் இடைச் செருகலே.

0 Comments: